தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் LKG மற்றும் UKG வகுப்புகள் மூடப்படுவதாக வெளியான தகவலுக்கு தற்போது தொடக்கக்கல்வித் துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
தமிழகத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வந்ததன் காரணமாக, அரசு நடத்தி வரும் அங்கன்வாடி மையங்களில் புதிய சேர்க்கையின் எண்ணிக்கை சரிவடைந்து வந்தது. இதனை சரி செய்யும் நோக்கத்தில், கடந்த 2018ம் ஆண்டில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் LKG மற்றும் UKG வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் கீழ், 2019-20ம் கல்வியாண்டு முதல் LKG மற்றும் UKG மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? வைரலாகும் தகவல்! பொதுமக்கள் அச்சம்!
அதன் படி, தமிழகத்தில் உள்ள மொத்தம் 2,381 அங்கவடிகளில் பயின்று வந்த சுமார் 52,933 மாணவர்கள் நேரடியாக LKG மற்றும் UKG வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த பள்ளிகளுக்கான வகுப்பறைகள் சிறப்பான கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு, மாணவர்களுக்கு சீருடை, காலணி போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. தவிர இம்மாணவர்களுக்கு பயிற்றுவிக்க தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில், இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். இத்திட்டம் மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்று வந்தது.
மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – 18 மாத DA நிலுவைத் தொகை எப்போது? தொடரும் வலியுறுத்தல்!
இந்நிலையில், சமீபத்தில் அங்கன்வாடிகளில் உள்ள LKG மற்றும் UKG வகுப்புகளை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித் துறைக்கு இப்பள்ளிகள் முறையாக கவனிக்கப்படாதது தெரிய வந்தது. அதனால் இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் தற்போது புதிய சர்ச்சயை உருவாக்கி இருக்கும் நிலையில், இது தொடர்பாக தொடக்கக்கல்வித் துறை கூறுகையில், அங்கன்வாடிகளில் உள்ள LKG மற்றும் UKG வகுப்புகள் மூடப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை.
இந்த வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களை பணியமர்த்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கன்வாடிகளில் செயல்படும் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று விளக்கம் அளித்திருக்கிறது. இதற்கிடையில் அங்கன்வாடிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் இதுவரை துவங்கப்படாததால், பலரும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க துவங்கி விட்டனர். அதனால் அரசு இந்த நடவடிக்கைகளை விரைவில் முடித்து பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.