மாநிலத்தில் மீண்டும் இரவு நேர முழு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!
கொரோனா 3 அலை தீவிரமடைந்த சூழ்நிலையில் அசாம் மாநிலத்தில் இரவு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்து வருவதால் அமலில் இருந்த இரவு ஊரடங்குக்கு இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு ரத்து:
கோவிட்-19 பாதித்த நிலையில் நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. நோய் தொற்றின் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் இரண்டு விதமான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அனைத்து நாட்டு மக்களுக்கும் செலுத்தப்பட்டு வந்தது. மேலும் இரவு ஊரடங்கு, வார இறுதி நாள் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசி காரணமாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது.
மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அருமையான வாக்குறுதிகள்!
இருப்பினும் மீண்டும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ்( ஓமைக்ரான்) தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கின. இந்த ஓமைக்ரான் தாக்கம் காரணமாக தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கின, இதன் விளைவாக மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்தன. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் கொரோனா 3 வது அலை மற்றும் ஓமைக்ரான் தாக்கம் காரணமாக ஜனவரி மாதத்தில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
சென்னைவாசிகளே ‘அலெர்ட்’ – கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை! உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
இந்நிலையில் அசாம் மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,132 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,28,24,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலவர அடிப்படையில் அசாம் மாநிலத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அனைத்து நகரங்களில் அமலில் இருந்த இரவு ஊரடங்கு இன்றுடன் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.