மதுரை மாவட்ட போக்குவரத்தில் மாற்றங்கள் – மேம்பால பணிகள் எதிரொலி!
மதுரையில் நத்தம் ரோடு மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் பிப்ரவரி 20ம் தேதி முதல் அழகர்கோயில் சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்று பாதைகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
மாற்று பாதை:
மதுரை மாவட்டம் நத்தம் பகுதியில் சாலை மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் வழக்கமாக வாகனங்கள் செல்லும் பாதைகளில் அடைக்கப்பட்டுள்ளது. அதன் படி அழகர்கோயில் சாலை பகுதியில் இருந்து கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் அவுட் போஸ்ட்ல் இருந்து அழகர் கோவில் சாலை நோக்கி செல்லும். தற்போது கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால் இந்த பாதை அடைக்கப்பட்டுள்ளது. மாற்று வழியில் செல்ல ஏற்படும் செய்யப்பட்டுள்ளது. இனி நத்தம் பகுதி வழியே அழகர் கோயில் செல்லும் வாகனங்கள் எஸ்பி.பங்களா பகுதியில் இடது புறம் திரும்பி பாரதி உலா ரோடு வழியாக தாமரைத் தொட்டி செல்ல வேண்டும்.
தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!
அழகர் கோவில் சாலையில் இருந்து வரும் வாகனங்களும், தாமரை தொட்டி வழியாக ரேஸ் கோர்ஸ் ரோடு, முத்தையா மன்றம், அவுட்போஸ்ட் வழியாக அழகர்கோயில் சாலை சென்று கோரிப்பாளையம் செல்ல வேண்டும். கோரிப்பாளையத்தில் இருந்து அழகர்கோயில், மேலூர் செல்லும் வாகனங்களுக்காக அழகர்கோவில் ரோட்டில் தல்லாகுளம் பெருமாள் கோவில் முதல் அவுட்போஸ்ட் வரை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அழகர்கோயில் வாகனங்களில் புதிய ரூட்டில் சென்று பாரதி பூங்கா எதிரே உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி சாலை வழியாக ராஜா முத்தையா மன்றம் சென்று மேலூர் செல்லலாம்.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?
மேலூர் ரோடு பகுதியில் இருந்து நத்தம் ரோடு செல்ல வேண்டிய வாகனங்கள் அவுட் போஸ்ட் சந்திப்பில் இருந்து வலது புறம் அழகர்கோயில் சாலையில் திரும்பி பாரதியார் பூங்கா வழியாக பி டி ஆர் சிலை ரவுண்டானா வழியாக நத்தம் செல்லலாம். அதனை தொடர்ந்து ஜவகர் ரோடிலிருந்து அவுட்போஸ்ட் சந்திப்புக்கு நேரடியாக வரும் பாதை தடை செய்யப்பட்டுள்ளது. பிடிஆர் சிலை சந்திப்பில் இருந்து இடது புறம் நத்தம் சாலையை அடைந்து பாரதி உலா ரோடு, வழியாக கோரிப்பாளையம் செல்லலாம். மேற்கண்ட மாற்று பாதை நடைமுறை பிப்ரவரி 20 முதல் அமலுக்கு வரும் என்று போக்குவரத்து காவல் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.