தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வருகிற 21 ஆம் தேதி இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக திறனாய்வு தேர்வு:
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 என 4 ஆண்டுகள் உதவித் தொகை வழங்கப்படும்.
தமிழக ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு – கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை!
இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வருவதால் ஊரக திறனாய்வு தேர்வு வருகிற 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்வு குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 21ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் இந்த பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 21ம் தேதி பிற்பகல் முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பயோமெட்ரிக் வருகைப்பதிவு மீண்டும் அமல்!
மேலும் தலைமை ஆசிரியர்கள் ஹால் டிக்கெட்டை மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்கி, தேர்வுக்கான அறிவுரை வழங்க வேண்டும். அதில் மாணவர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தம் இருந்தால், அதை சிவப்பு நிற மையால் அழித்து, சரியான பதிவை குறிப்பிட்டு, தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பமிட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.