மீண்டும் அமல்படுத்தப்படும் மினி ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை!
வேகமாக அதிகரித்து வரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு ஹாங்காங் நகரம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தவிர்த்து மற்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
சமீப காலமாக சீனாவின் ஹாங்காங் நகரத்தில் ஒமிக்ரான் வைரஸின் புதிய பாதிப்புகள் திடீர் எழுச்சி கண்டு வருகிறது. இத்தகைய பாதிப்புகளை தடுக்கும் விதமாக நகரம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு கடுமையான ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தவிர்த்து மற்ற அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கொரோனா நேர்மறை பாதிப்புகளை பதிவு செய்பவர்களை தனிமைப்படுத்துதல் அரசின் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA), HRA உயர்வு – வர இருக்கும் 5 முக்கிய அறிவிப்புகள்!
மேலும் அதிகளவு கொரோனா பாசிட்டிவ் விகிதங்களை பதிவு செய்யும் நகரத்தின் சில பகுதிகள் சீல் வைக்கப்படலாம் என்றும் இந்த மினி லாக்டவுன்களின் நீளம் மாறுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவிர அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒரு பரந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஹாங்காங்கின் பொருளாதாரம், வணிகங்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கணித்துள்ளனர். அதனால் 7.4 மில்லியன் மக்கள் மீது அத்தகைய நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவது மனிதவள பற்றாக்குறை என்று கருத்துக்கள் எழுந்துள்ளது.
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதற்கு முன்னதாக ஹாங்காங்கின் தலைவர் கேரி லாம், நகரம் முழுவதும் மொத்த பூட்டுதலை விதிக்கும் எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று கூறினார். என்றாலும் தொற்றுநோயை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. அதனால் ஹாங்காங் முழுவதும் கடுமையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக பொது இடங்களில் இரண்டு பேருக்கு மேல் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் இரண்டு குடும்பங்கள் தனிப்பட்ட முறையில் சந்திப்புகளை நடத்தலாம்.
மேலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, மார்ச் 6ம் தேதி வரை நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. உணவகங்கள் மாலை 6 மணிக்குப் பிறகு உணவருந்தும் சேவைகளை வழங்க முடியாது. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டிருப்பதை நிரூபிக்கக்கூடிய நபர்கள் மட்டுமே வணிக வளாகங்கள் முதல் தேவாலயங்கள், சலூன்கள் வரையிலான இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஹாங்காங் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஹாங்காங் நகரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,000 புதிய பாதிப்புகளுடன் 200 இறப்புகள் பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.