TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள 8 தணிக்கை பதவிகளுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு தகவலை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
கூட்டுறவுத்துறை:
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் போட்டித் தேர்வுகள் நடைபெறாததால் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. இதனால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு இந்தாண்டு 32 வகையான போட்டித் தேர்வுகளை நடத்த TNPSC தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & முழு விபரம் இதோ!
இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது கூட்டுறவுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூட்டுறவுத் துறையில் 8 தணிக்கை பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.ஏ (கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
2022ம் ஆண்டில் ஊழியர்களுக்கு 9% சம்பள உயர்வு – ஆய்வில் தகவல்! முழு விவரம் இதோ!
இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல் 30ம் தேதி அன்று முதல் தாள் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும். மேலும் புதிய விதிமுறைகளின் படி தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தகுதியோடையோர் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.