தமிழக மாவட்டத்தில் பிப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி அன்று செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு கந்தூரி விழா நடக்க இருப்பதால் அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்களுக்கு மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவு வழங்கும். அப்படி, மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை விடுமுறை அளிக்கப்படும்.
ஜியோவின் ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!
இதற்காக மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும். தற்போது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா வரும் பிப்ரவரி 16ம் தேதி அன்று நடக்க உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தர்காவில் ஒலியுல்லாஹ் என்னும் இஸ்லாமிய சூபி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த கந்தூரி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
இதனால் பிப்ரவரி 16ம் தேதியான புதன்கிழமை அன்று மாநில அரசின் அனைத்து அலுவலங்கள் மற்றும் கல்வி நிலையங்களும் மூடப்படும். இதற்கு பதிலாக பிப்ரவரி 26ம் தேதியான சனிக்கிழமை அன்று வேலைநாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16-ந் தேதி தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலகங்களில் அரசு சார்ந்த அவசர பணிகள் மேற்கொள்ள தேவையான பணியாளர்கள் கொண்டு செயல்படும் என்றும் அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.