தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நாளன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22ம் தேதியும் மதுபான கடைகள் திறக்க தடை என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

மதுபான கடைகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் அண்மையில் தளர்த்தப்பட்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுபாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

மேலும் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 56 ஆயிரம் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் காண்கிறார்கள்.மேலும் தேர்தல் நாளன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் 19ம் தேதி நடக்க இருந்த ஒரு சில தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Post Office சேமிப்பு திட்டம் – ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் வழிமுறைகள் இதோ!

இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும், 22ம் தேதியும் மதுபான கடைகள் இயங்கவும் விற்கவும் தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், பொது இடங்களிலும் தனியார் கட்டிட சுவர்களிலும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டுதல் கூடாது எனவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அனைத்து கட்டுபாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல் மது பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!