ஜியோவின் ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!
பிரபல நெட் ஒர்க் நிறுவனமான ஜியோவின் 200 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி இப்பதிவில் காண்போம். குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய எண்ணுபவர்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும்.
ஜியோ:
இந்தியாவில் கொரோனா பரவிய காலம் முதல் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகிவிட்டதால் இனைய தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மக்கள் தங்களின் மொபைலில் உள்ள இன்டர்நெட்டை தான் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சாமானியர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நேரத்தில் வோடபோன்- ஐடியா, ஏர்டெல் , ஜியோ ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதனால் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
மற்ற நிறுவனங்களை விட ஜியோ குறைவான ரீசார்ஜ் பிளான்களை பயனர்களுக்கு வழங்கியது, இதனால் மற்ற நெட்வொர்க் பயனர்களுக்கும் ஜியோவுக்கு மாறினர். தற்போது ஜியோ 21% வரை ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளனர். ஜியோவின் ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களும் 200 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் பயனர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இந்த நிலையில் ஜியோவின் 200 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களும் உள்ளது. ரூ.186 ரீசார்ஜ் திட்டம் தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள்,அனைத்து நெட்வொர்க்கிலும் இலவச அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ மூவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நாளின் டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். அதாவது தினசரி டேட்டா முடிந்த பிறகும் இந்த திட்டத்தில் இணைய வசதியைப் பெற முடியும்.