ஜீ தமிழின் ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் நடக்கும் அதிரடி மாற்றம் – ஹீரோவாக இவரா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
சின்னத்திரையில் வரும் சீரியல்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அடிக்கடி மாற்றப்படுவது சாதாரண விஷயமாகி விட்டது. அதேபோல், தற்போது ஜீ தமிழில் வரும் சீரியலில் ஒரு அதிரடி மாற்றம் நடந்துள்ளது.
என்றென்றும் புன்னகை:
ஜீ தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் 6 நாட்களில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் என்றென்றும் புன்னகை. ‘மங்கம்மா காரி முனவாரலு’ என்கிற தெலுங்கு சீரியலின் கதையை தழுவி எடுக்கப்பட்ட சீரியல் தான் தமிழில் என்றென்றும் புன்னகை என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. அதவாது முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆகாஷ் என்ற தனது பேரனுக்கு ஆண்டாள் என்கிற பாட்டி தென்றல் என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்திற்கு பிறகு தான் ஆகாஷை பற்றிய அனைத்து விவரங்களையும் தென்றல் தெரிந்து கொள்கிறார்.
தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இந்த சீரியலில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வரும் மார்ச் மாதத்தோடு இந்த சீரியல் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த சீரியலின் கதை. இதில் ஹீரோவாக சித்து வேடத்தில் நடித்து வந்த தீபக்குமார், தற்போது சீரியலை விட்டு விளக்கியுள்ளார். இவர் சமீபத்தில் தான் தனது காதலி அபிநவ்யாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 14ம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் தான் இவர் சீரியலை விட்டு விலகினார் என்றும் பலரும் கூறிவரும் நிலையில், உண்மை காரணம் அதுவல்ல. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலை இவர் நடிக்க உள்ளதால் தான் என்றென்றும் புன்னகை சீரியலை விட்டு விளக்கியுள்ளார். இவருக்கு பதிலாக ஜீ தமிழ் டிவி சீரியல் நடிகர் ஆன விஷ்னுகாந்த் அந்த வேடத்தில் நடிக்க உள்ளார். இவர் முன்னதாக ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ மற்றும் ‘கோகுலத்தில் சீதை’ ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.