தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன் கருதி பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டுகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14ம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் வருகிற 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு பொது கூட்டங்கள் நடைபெறும். அத்துடன் கட்சி சார்பாக பிரச்சாரங்கள் நடைபெறும். இதில் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றுவார்களா என்பதை உறுதி செய்ய முடியாது. அதனால் தேர்தலுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் மற்றும் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவல் குறைந்து வருகிறது.
பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் தென்னாப்பிரிக்காவில் மீண்டும் நியோகோவ் என்ற புதிய வைரஸ் மற்றும் ஒமைக்ரான் தொற்றின் திரிபான பிஏ 2 வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகையான வைரஸ் தொற்றும் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அத்துடன் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.