பிப்ரவரி 14ம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கோவாவில் வரும் பிப்ரவரி 14ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருப்பதால் அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது விடுமுறை:
கோவாவில் 40 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும். கோவாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 587 வேட்புமனுக்கள் சட்டமன்றத் தேர்தலில் பெறப்பட்டுள்ளது. கோவா இந்த ஆண்டு வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி (AAP) , மற்றும் அறிமுக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆகிய நான்கு முக்கியப் போட்டியாளர்கள் உள்ளனர்.
பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய அஞ்சலியின் புதிய சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை ஆம் ஆத்மியும் பாஜகவும் அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. தற்போது முதல்வராக உள்ள பிரமோத் சாவந்தை முதல்வராக்க பாஜக முடிவு செய்துள்ளது. தொழில் ரீதியாக மருத்துவரான சாவந்த், சங்கேலிம் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவா தேர்தலில் அமித் பலேகரை முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி அன்று கோவாவில் நடக்க உள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – பிப்.11ம் தேதிக்குள் பட்டியல்!
சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கோவா அரசு பிப்ரவரி 14 ஆம் தேதியை “பொது விடுமுறை” என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவா அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “பிப்ரவரி 14-ம் தேதி வாக்குப்பதிவை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்படும்” என்று கூறியுள்ளது. இது தொழில்துறை தொழிலாளர்கள், அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசின் தொழில்துறைத் துறைகளின் தினசரி கூலித் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களின் வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்றும் மாநில அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.