TNPSC குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வரும் போட்டி தேர்வுகளில் ஒரு சில மாற்றங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் வெளியீடு:
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இருப்பினும் கடந்த 2 வருடங்களில் கொரோனா தாக்கம் காரணமாக போட்டி தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தடுப்பூசி மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கம் சற்று ஓய்ந்து வருகிறது. இந்த நிலையில் போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் குரூப் 4 VAO தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வர உள்ளதாக TNPSC செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து TNPSC தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலப்பாடம் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித்தாளில் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு தேர்வரும் தமிழ் மொழி தாளில் கட்டாயம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்.
தமிழகத்தில் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் கோரிக்கை!
இந்த நிலையில் TNPSC தேர்வுகள் பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெறுமா அல்லது பாடத்திட்டம் மாற்றியடைக்கப்படுமாக என்பது குறித்து தேர்வர்கள் மத்தியில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்திற்கு தீர்வளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டத்தின்படி தான் தேர்வு நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது. மேலும் குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கு பாடத்திட்டத்தினை தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.