TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
தமிழகத்தில் TNPSC நடத்தி வரும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் ஆதார் விவரங்களை OTR உடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் TNPSC மூலம் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த போட்டி தேர்வுகள் அடிப்படையில் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனை தொடர்ந்து குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து TNPSC தேர்வுக்கான பாடத் திட்டத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு விடுமுறை, பிற மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
அந்த வகையில் குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுக்கான புதிய பாடத்திட்டம், TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒரு முறை நிரந்தரப் பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் அவர்களது ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விவரங்களை பிப்ரவரி 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்காலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்படும் அறிவிக்கைகள் அடிப்படையில் தனது ஒரு முறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு குறித்து அறிய 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது [email protected] /[email protected] மூலமாகஅலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.