பிக் பாஸ்’ அல்டிமெட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் – ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், முதல் வாரத்திலேயே எலிமினேஷன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் எலிமினேஷன்:
விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் புதிய பரிமாணம் ஓடிடி தலத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டது. முதல் வாரம் தொடங்கப்பட்ட நிலையில் 14 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களிலும் சுவாரசியம் அதிகமாக இருக்கும் போட்டியாளர்கள் வந்தனர்.
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ‘டேக் எ பிரேக்’ அறிமுகம்!
வனிதா, சுரேஷ், அனிதா, தாமரை, பாலாஜி, பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஷாரிக், சினேகன், நிரூப், ஸ்ருதி, அபிராமி, அபிநய், சுஜா ஆகியோர் முதல் நாளில் நடிகர் கமல் அறிமுகம் செய்து வைத்து வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாள் முதல் பல சண்டைகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் வந்த முதல் நாளில் ஷாரிக் தான் வீட்டின் தலைவர் என அறிவித்தார். மேலும் முதல் வாரத்திலேயே நாமினேஷன் இருந்தது.
முதல் முறையாக கணவருடன் நேருக்கு நேர் சண்டையிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!
அதில் நிரூப், அனிதா, சுருதி, சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் அதில் இருந்து குறைவான வாக்குகளுடன் சுரேஷ் தாத்தா மற்றும் அபிநய் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் சுரேஷ் தாத்தா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக சில உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.