அடுத்த 64 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதன் காரணமாக காஷ்மீரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டுடன் இணைப்பு!
இந்நிலையில் காஷ்மீரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, காஷ்மீரில் அடுத்த 64 மணி நேரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இன்று பிற்பகல் 2 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பொது மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளிவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறையில் கிராம செவிலியர் வேலை – விண்ணப்பிக்க பிப்.9ம் தேதி கடைசி நாள்!
அத்துடன் ஊழியர்கள் மற்றும் அவசரக்கால தேவைகளுக்கு மட்டும் வெளியில் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற அனைத்து அத்தியாவசியமற்ற இயக்கங்கள் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளிவருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் வெளிவருவதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.