தமிழக சுகாதாரத் துறையில் கிராம செவிலியர் வேலை – விண்ணப்பிக்க பிப்.9ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பணியிடத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிராம சுகாதார செவிலியர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளது. இப்பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள மாநிலங்களின் பட்டியல் – A டூ Z விபரங்கள் இதோ!
இதற்கு 18 வயது முதல் 59 வயது நிரம்பியவர்கள் வரை விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அத்துடன் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் துணை செவிலியர் மருத்துவச்சி, பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் பதிவு செய்து சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து இப்பணிக்கு கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி குறித்த திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
வார இறுதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!
இப்பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வழங்கப்படுகிறது. அத்துடன் இதற்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதனை விண்ணப்பிக்க ரூ.300 சேமிப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலும் சில தகவல்களை பெற http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.