தமிழகத்தில் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் 8 படங்கள் – முழு விபரம் இதோ!
தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொங்கலுக்கு ரிலீஸ்:
தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டு வருகிறது.
பொங்கல் தள்ளுபடி: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இதையடுத்து பொங்கலுக்கு ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், வலிமை உள்ளிட்ட படங்கள் வெளியாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், வலிமை உள்ளிட்ட பெரிய படங்களை வெளியிடாமல் தள்ளி வைத்துள்ளனர். அத்துடன் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் பெரிய படங்களை வெளியிடாமல் இருக்கின்றனர். ஆனால் பொங்கலுக்கு குறைந்த செலவில் உருவான படங்கள் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் விடுமுறை – கொரோனா எதிரொலி!
அந்த வரிசையில் சசிகுமார் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்துள்ள நாய் சேகர் அத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நடிப்பில் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து விதார்த் நடித்துள்ள கார்பன் திரைப்படமும், மருது, பாசக்கார பய, ஏஜிபி, ஐஸ்வர்யா முருகன், நீ நீயாக இரு உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.