ஜனவரி 16 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பேரலைத்தொற்றுக்கு மத்தியில் ஜனவரி 16ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு
அதிகளவு புதிய பாதிப்புகளை பதிவு செய்து வரும் கொரோனா வைரஸின் 3ம் அலை தொற்று காரணமாக உத்தரகண்ட் மாநில அரசு, நேற்று (ஜன.7) இரவு புதிய நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது. இந்த வழிகாட்டுதல்களின்படி, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜனவரி 16ம் தேதி வரை மூடும்படிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஆன்லைன் முறையில் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? கல்வித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
இது தவிர, உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் பேரணிகள் மற்றும் போராட்டங்களுக்கு தடை விதிப்பதாக தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சந்து அறிவித்திருக்கிறார். இதற்கிடையில் அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினசரி 100க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக ஜனவரி 7ம் தேதி பதிவு செய்யப்பட்ட 630 என்ற தினசரி பாதிப்பு எண்ணிக்கை, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
இப்போது அம்மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கும் ஊரடங்கு உத்தரவில், பெரிய கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், மால்கள், திரையரங்குகள் போன்றவற்றை அதன் மொத்த கொள்ளளவில் 50 சதவீதமாக இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மிசோரம் மாநில அரசாங்கமும் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளையும், கல்லூரிகள், விடுதிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பிற கல்வி நிறுவனங்களையும் மூடும்படிக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.