பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? கல்வித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா பரவல் சற்று குறைவாகவே பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்தால் மேலும் சில கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தியாவில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலை தொடங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது. அதனால் மாநிலங்களில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறைகளை அரசு அமல்படுத்தி வருகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
மேலும் இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், டெல்லி, உத்தரபிரதேசம், மணிப்பூர், ஹரியானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரையரங்கம், உணவகம், மதுபார், மதுபானக் கூடம், வணிக நிறுவனங்கள், மால்கள், கடைகளில் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லை நுழைவில் வருபவர்கள் கட்டாயமான முறையில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
அத்துடன் முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் வசூலிக்கப்படும். இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அமைச்சர் ஏ.நமச்சிவாயம் கூறியதாவது, புதுச்சேரியில் மற்ற மாநிலங்களை விட குறைவான அளவு கொரோனா பாதிப்பு உள்ளது. அதனால் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.