தமிழகத்தில் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவா்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த பின்பு நேரடியாகத் தோ்வு நடத்தப்படும் மற்றும் முதுநிலைப் படிப்பில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவுள்ளதாக துணைவேந்தா் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை அறிவிப்பு:

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த வகையில் கிண்டி வளாகத்தில் படித்து வரும் மாணவர்களை தொழில்முனைவோா்களாக உருவாக்குவதற்கு ஒரு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோா் ஒருங்கிணைப்பு மையம் – ஆமதாபாதில் உள்ள தொழில்முனைவோா் மையத்துக்கு இடையே துணைவேந்தர் வேல்ராஜ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. இதன் ஒப்பந்தம் மூலம் அதிகமான மாணவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவா். அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பலவேறு ஆராய்ச்சிகளை சமுதாயத்திற்கு தேவையான முறையில் பயன்படுத்தலாம்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஞாயிற்றுக்கிழமை பொங்கல் தொகுப்பு?

இதனால் நம் சமுதாயம் அதிக பொருளாதார வளர்ச்சி பெற முடியும். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய பயனாக ஆமதாபாத்தில் உள்ள தொழில் முனைவோர் நடத்தி வரும் சான்றிதழ் படிப்புகளை மாணவர்கள் படிக்கும் போதே கூடுதலாக படிக்கலாம். தற்போதைய காலகட்டத்தில் பொறியியல் முதுநிலை பாடப்பிரிவினைப் படிக்க வரும் மாணவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை 5க்கு குறைவாக இருந்தது. அதனால் அந்த பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாடப்பிரிவுகளை மூடிவிட்டு, மாணவர்களுக்கு வேலை வாய்ப்புள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அதிக பயனடைவார்கள்.

தமிழகத்தில் முழு ஊரடங்கில் இறைச்சி கடைகள் உட்பட அனைத்தும் மூடல் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று பரவல் மற்றும் பொங்கல் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஜனவரி 21 ஆம் தேதிக்குப் பிறகு மாணவா்களுக்கு நேரடியாக இறுதி ஆண்டு தோ்வு நடத்தப்படும் மற்றும் முதுநிலைப் படிப்புக்கு வரும் மாணவா்கள் தோ்வு எழுதாமல் வரக்கூடாது என அரசும், பல்கலைக்கழகமும் அறிவித்துள்ளது. இந்த அடிப்படையில் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு நடந்து கொண்டிருக்கும் போதே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தோ்வுகள் முடிந்த பின்பு, மீதம் இருக்கும் செய்முறைத் தோ்வுகள் நடத்தப்படும் என்று துணைவேந்தா் வேல்ராஜ் செய்தியாளா்களை சந்த்தித்த போது கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!