தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆணையர் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான நூலக பாடவேளை கட்டாயம் ஆக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
நூலக பாடவேளை:
தமிழகத்தில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைந்ததன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பாடவேளைகள் உள்ளன. தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவிப்பின் அடிப்படையில் பள்ளி மாணவர்களின் புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் நூலக பாடவேளை கட்டாயம் உருவாக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இது மட்டுமல்லாமல் தினசரி நாளிதழ் வாசிக்கவும் மாணவர்களுக்கு தனி நேரம் ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் நூலகம் செயல்பட்டு தான் வருகிறது. இருப்பினும் சில பள்ளிகளில் நூலக பாடவேளைகளுக்கு முக்கியத்துவம் தராமல், பயன்படுத்தாமல் உள்ளனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. அதனால் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பின் மூலம் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறையாவது நுாலக பாடவேளை ஒதுக்க வேண்டும் மற்றும் தனி அறை ஒதுக்கீடு செய்து ஒரு புத்தகத்தையாவது வாசிக்க தர வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
பள்ளிகளில் நூலக நேரம், காலை மாலை மட்டுமல்லாமல் உணவு இடைவேளை நேரங்களில் திறந்திருக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் தினசரி படிக்கும் புத்தகங்களிலிருந்து கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், நுால் அறிமுகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தலாம். ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களை நூலக பயணம் அழைத்து செல்லலாம். மாநில அளவில் ஆண்டுக்கு மூன்று முறை போட்டிகள் நடத்தி 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த தகவல் தமிழக பள்ளி மாணவர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.