தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியானவர்களுக்கு புதிய கார்டு வழங்க உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர்.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக 4000 ரூபாய் இரு தவணைகளில் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

தமிழகத்தில் 15 – 18 வயதுக்கு உட்பட்டோர் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி முன்பதிவு!

இதையடுத்து தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது ஆன்லைன் வாயிலாகவும் வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் புதிய அரசன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி விரைவு பெற்றது. ஆனாலும் இன்னும் சிலருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. தற்போது அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ள நிலையில் பரிசு தொகுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு பலர் விண்ணப்பித்து வருகின்றனர். அதில் தகுதியான நபர்களுக்கு புதிய கார்டு வழங்க, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். இதனால் பொங்கல் பண்டிகையொட்டி விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!