‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பின் பார்ட்டி கொண்டாடிய வருண் & அக்ஷரா – வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் வருண், அக்ஷரா இருவரும் மதுமிதாவை மீட் செய்து ஒரு சிறிய கொண்டாட்டதை நிகழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் பார்ட்டி
தற்போது ஸ்வாரஸ்யமும், விறுவிறுப்புமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கிறது. இந்த முறை சற்று தாமதமாக துவங்கிய இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் பல்வேறு சண்டைகள், பிரச்சனைகள், கலாட்டாக்கள், நெகிழ்ச்சியான தருணங்கள் என பல நிகழ்வுகள் நடந்தேறியது. என்னதான் ஒவ்வொரு முறையும் போட்டியாளர்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் எழுந்து வந்தாலும், அவ்வப்போது மக்களை மகிழ்விக்க அவர்கள் தவறுவதில்லை.
எங்கிருந்து வந்தது இந்த ‘OK Boomer Uncle’ – இது தான் விஷயமா? மிஸ் பண்ணாம படிங்க!
என்றாலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்பதால் போட்டிகள் அனைத்தும் கடினமாகி கொண்டே இருக்கிறது. அதுவும் இந்த சீசனில் தான், நிகழ்ச்சி முடியப்போகும் கடைசி வாரங்களில் கூட 8 போட்டியாளர்கள் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இடம் பிடித்து வருகின்றனர். இதற்கிடையில் அவ்வப்போது நடைபெறும் எலிமினேஷன் ப்ராசஸின் படி கடந்த முறை அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தாமரையை 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் – சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஓபன் டாக்!
இம்முறை இந்த எலிமினேஷன் ப்ராசஸ் டபுள் எவிக்ஷனாக நடைபெற்றது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமையன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் வருணுக்கு அவரது குடும்பத்தினர் அனைவரும் உற்சாக வரவேற்பு கொடுத்து வெல்கம் செய்திருந்தனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று வலைதளத்தில் வெளியானது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஃபேஷன் நிகழ்வு ஒன்றில் வருண், அக்ஷரா மற்றும் மதுமிதா ஆகியோர் மீண்டுமாக ஒரு சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.