Post Office இல் மாதம் ரூ.1500 முதலீடு செய்தால் ரூ.34.60 லட்சம் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் ஏராளமான சேமிப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் மூலமாக குறைந்த முதலீடு செலுத்துவதில் அதிக வட்டிகளை பெற முடியும். இதனால் மக்கள் மத்தியில் அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.
சேமிப்பு திட்டம்:
கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நிதி நெருக்கடி நிலையை சந்தித்து வந்தனர். அதனால் பாதுகாப்பான முதலீட்டில் தங்கள் முதலீடுகளை செலுத்த விரும்பினர். அதில் குறிப்பாக அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செலுத்தி அதிக வட்டி தொகையை பெறுகின்றனர்.
இந்திய அஞ்சல் துறையில் ஏராளமான சேமிப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் கிராம் சுரக்ஷா என்ற சேமிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் மாதத்திற்கு ரூ.1500 முதலீடு செய்வதன் மூலமாக ரூ.35 லட்சம் வரை பெற முடியும்.
புத்தாண்டை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இத்திட்டத்தில் இணைவதற்கான வயது 19 முதல் 55க்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அத்துடன் ரூ.1515-ஐ மாதந்தோறும் முதலீடு செய்தால் மெச்சுரிட்டி காலத்தின் முடிவில் ரூ.31.60 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இதே போல் ரூ.1463-யை மாதந்தோறும் முதலீடு செய்தால் 58 ஆண்டுகளின் முடிவில் ரூ.33.40 லட்ச ரூபாய் என்ற மொத்த தொகை கிடைக்கிறது. 60 ஆண்டுகள் ஒரு நபர் இத்திட்டத்தில் ரூ.1411-யை மாதந்தோறும் சேமித்தால் மெச்சுரிட்டி காலத்தின் முடிவில் 34.60 லட்ச தொகை வரை கிடைக்கும்.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மறு பணி நியமனம் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
இந்நிலையில் இத்திட்டத்தில் உள்ளவர்கள் மெச்சுரிட்டி காலத்திற்குள் இறந்துவிட்டால் அவர்களின் பணம் அவர்களது வாரிசுக்கு வழங்கப்படும். மேலும் ஆண்டுதோறும் கட்டப்படும் ப்ரீமியம் தொகையை 12 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையோ செலுத்திக் கொள்ளலாம். அத்துடன் நிதி நெருக்கடி நிலையின் போது ப்ரீமியம் தொகையை கட்ட இயலாத நிலை ஏற்பட்டால் 30 நாட்கள் க்ரேஸ் ப்ரீயட் நாட்களாக வழங்கப்படுகிறது. இதையடுத்து திட்டத்தில் 3 ஆண்டுக்கு பிறகு ரத்து செய்கிறார் எனில் அவர்களுக்கு இத்திட்டம் மூலமாக பெறப்படும் எந்த வித பலன்களும் கிடைக்காது.