தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மறு பணி நியமனம் – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளியில் மறு நியமனத்திற்காக விண்ணப்பித்திருக்கும் பணி நிறைவு ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் விரிவான தகவலை இப்பதிவில் பார்ப்போம்.
உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சிறப்பாக நடந்து வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் கல்வி ஆண்டின் மத்தியில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் பணி நிறைவு பெறுவது வழக்கம். அந்நிலையில் உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட ஆண்டின் பாடத்தை எடுத்து வரும் ஆசிரியர்கள் பணி நிறைவு பெற்று உபரி ஆசிரியர்கள் பாடத்தை தொடங்குவதால் மாணவர்களின் கல்வி பாதிப்படைகின்றது. இதனால் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பணி மறு நியமனத்திற்காக விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு அதனை நிராகரித்து உள்ளது. இதன் வகையில் ஆசிரியர்கள் மறு நியமனம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பணி மறு நியமனத்திற்கு விண்ணப்பித்திருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட கல்வி ஆண்டு முடியும் வரை பணிநியமனம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த வழக்கு விசாரணை வழக்கு நீதிபதி வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் முன்பு வந்தது. அப்போது குறிப்பிட்ட பாடத்திற்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். எனவே பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களின் சேவை தேவையில்லை என்பதால் அவர்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உபரி ஆசிரியர்களை நியமிப்பது குறித்து அரசு கொள்கை முடிவெடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதேசமயம் கல்வி ஆண்டின் மத்தியில் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் மாணவ, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று ஆசிரியர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ரேஷன் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு – ஆதாருடன் இணைப்பு! முழு விபரங்கள் இதோ!
இதன் அடிப்படையில் இருதரப்பிலும் வாதங்கள் நடைபெற்றது. ஆனால் நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டு குறிப்பிட்ட கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களை கல்வியாண்டு இறுதி வரை பணிநியமனம் செய்வது தொடர்பாக அறிவிக்கப்பட்ட 2018 இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பதிலாக உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க முடியாது என்பதை அறிவித்தனர். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விஷயத்தில் மறு நியமனம் சார்பாக விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு எந்த உரிமையும் வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த தகவல் ஆசிரியர்களுக்கு பெரும் அளவில் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.