ஜனவரி 1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு!
ஓமிக்ரான் பரவல் தடுக்கும் நடவடிக்கையாக மாநிலத்தில் இன்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக குறையாத விலையில் தற்போது அதிலிருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் தொற்று வேகமெடுத்தகு வருகிறது. இந்த தொற்று இரண்டாம் அலையை போல அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 350 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 57 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.
இந்தியாவில் மாநில வாரியாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – 400 ஐ கடந்த ஓமிக்ரான்!
இதையடுத்து மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கு விதிப்பது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடுவர் என்பதால் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும் தடுப்பூசிகளை விரைந்து செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. உத்திர பிரதேசம் , ஒடிசா, குஜராத், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாவட்டங்களில் ஓமிக்ரான் தடுப்பு பணியாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
TNUSRB கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – பிப்.1 முதல் பயிற்சிகள் துவக்கம்!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஹரியானாவில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்படும் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடாக ஹரியானாவில் 2022 ஜனவரி 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.