இந்தியாவில் மாநில வாரியாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – 400 ஐ கடந்த ஓமிக்ரான்!

0
இந்தியாவில் மாநில வாரியாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - 400 ஐ கடந்த ஓமிக்ரான்!
இந்தியாவில் மாநில வாரியாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - 400 ஐ கடந்த ஓமிக்ரான்!
இந்தியாவில் மாநில வாரியாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – 400 ஐ கடந்த ஓமிக்ரான்!

தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் குறிப்பாக தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு

ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் தற்போது ஓமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று 360-ஆக தொற்று எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 400 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக மராட்டியத்தில் மேலும் 20 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இதுவரை ஓமைக்ரான் தொற்று பாதிப்பு 109-ஆக உயர்ந்துள்ளது.

TNUSRB கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – பிப்.1 முதல் பயிற்சிகள் துவக்கம்!

ஆதலால் அங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூட கூடாது என்றும் அறிவித்துள்ளது. இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை மற்றும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தில் தேவாலயத்தில் 50 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹோட்டல், பூங்கா மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹரியானாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில முதல்வர் அறிவிப்பு!

அங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட தடை என்று அறிவித்துள்ளது. அத்துடன் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 1 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குஜராத்தில் மாநிலத்தில் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு மாநிலங்களில் ஓமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!