TNUSRB கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – பிப்.1 முதல் பயிற்சிகள் துவக்கம்!
தமிழகத்தில் TNUSRB தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் PRS பயிற்சி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
PRS பயிற்சி:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் TNUSRB தேர்வு வாரியத்தால் PC மற்றும் SI தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் (PC) தேர்வுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தகுதித்தேர்வு, உடற்கூறு அளத்தல் உள்ளிட்டவை கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
ஓமைக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில முதல்வர் அறிவிப்பு!
பின்னர் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தகுதித்தேர்வு, உடற்கூறு அளத்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. அதன்பின் எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் உடற்திறன் தேர்வு மதிப்பெண் ஆகிய இரண்டையும் சேர்த்து வழங்கப்படும் ஓவர்ஆல் கட்ஆப் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தேர்ச்சி பெற்றுள்ள அனைவருக்கும் போலீஸ் விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
TNPSC குரூப் 2 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம்! முக்கிய தகவல்!
இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் PRS பயிற்சி வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியிட்டிருந்தார். ஆனால் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட இருந்த PRS பயிற்சி வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தேர்ச்சி பெற்றுள்ளார் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.