Post Office இன் சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறை மக்களுக்கு பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தினசரி ரூ.417 சேமிப்பதன் மூலம் ஒரு பெரிய தொகையை எதிர்காலத்தில் பெறக்கூடிய வகையில் சிறந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ரூ.40 லட்சம் ரிட்டன்ஸ்:
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறை மக்களுக்கு நலன் தரும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களும் தங்களது முதலீட்டு தொகையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அஞ்சல் துறையில் தங்களது சேமிப்பை தொடங்கி வருகின்றனர். ஏனெனில் அஞ்சல் துறை முதலீடு என்பது ரிஸ்க் இல்லாத ஒரு முதலீடாகும். ரிஸ்க் எடுக்க விரும்புவோர் பங்கு சந்தை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் தங்களது முதலீட்டை தொடங்கி வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – “எண்ம (டிஜிட்டல்) பலகை திட்டம்” அறிமுகம்!
தங்களது முதலீட்டை பாதுகாப்பு மற்றும் நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும் வகையில் தொடங்க விரும்புபவர்களுக்காகவே அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்ட சிறந்த சேமிப்பு திட்டம் தான் PPF திட்டமாகும். இந்த திட்டத்தில் தினசரி ரூ.417 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40 லட்சத்திற்கு மேல் ரிட்டன்ஸ் பெற முடியும். அதாவது தினசரி ரூ.417, மாதத்திற்கு ரூ.12,500, வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் ஆகும். இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!
அதன்படி ஒரு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என்றால் 15 ஆண்டுகளுக்கு ரூ.22.50 லட்சம் முதலீடு செய்கிறோம். தற்போது PPF திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் வட்டியின் மூலம் ரூ.18.18 லட்சம் கிடைக்கிறது. இவ்வாறாக நாம் முதலீடு செய்த தொகை ரூ.22.50 லட்சம் மற்றும் வட்டி ரூ.18.18 லட்சம் இரண்டும் சேர்த்து இத்திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் முடிவடையும் போது ரூ.40.68 லட்சம் ரிட்டன்ஸ் கிடைக்கும். உங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் முதலீட்டை செலுத்தலாம்.