தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 – ரூ.130 கோடிக்கு ஆவின் நெய்!
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பிற்காக ரூ.130 கோடிக்கு ஆவின் நெய் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு:
தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் முறை கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டு கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்போடு ரொக்க பணமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TCS நிறுவனத்தில் ரூ.4.2 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்நிலையில் இந்த ஆண்டு ஆட்சி மாறியுள்ளது. எனினும் வழக்கமாக வழங்கப்பட்டு வரும் பச்சரிசி, முந்திரி, நெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மக்களுக்குவழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் தொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான 20 பொருட்கள் மற்றும் முழுக்கரும்பு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த பொங்கல் தொகுப்பில் உள்ள நெய் ஆவின் நிறுவனத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் மீண்டும் 3% DA உயர்வு! தகவல் வெளியீடு!
இது குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நெய் ரூ.130 கோடிக்கு ஆவின் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிறப்பு பொங்கல் பரிசு மூலம் தமிழகத்தில் சுமார் 2 கோடியே 16 லட்சம் ரேஷன் அட்டைதாரர் குடும்பங்கள் பயனடைய உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.