மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் மீண்டும் 3% DA உயர்வு! தகவல் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 31% அகவிலைப்படியோடு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய தகவல் மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பள உயர்வு:
நாடு முழுவதும் அரசுத்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு புதிய திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியினால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதாவது கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து 13 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
டிசம்பர் 30 முதல் ஊரடங்கு உத்தரவு அமல் – அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை! ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!
தற்போது கொரோனா தொற்று பரவல் பெருமளவு குறைந்து விட்டது. அதனை தொடர்ந்து பொருளாதார நிதி நெருக்கடியை சரிசெய்து மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 28% அகவிலைப்படியோடு 3% உயர்த்தி 31% வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடிவுக்கு வரும் ‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணம்? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!
அதாவது புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு மீண்டும் அகவிலைப்படி 3% உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத நிலுவையில் இருந்து வரும் அகவிலைப்படி உயர்த்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு ஏற்று அதனையும் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3% அகவிலைப்படி உயர்வு மற்றும் 18 மாத நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வும் வரும் மாதத்தின் தொடக்கத்தில் செயல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.