தடுப்பூசி போடவில்லை என்றால் பணி நீக்கம், சம்பள குறைப்பு – Google நிறுவனம் எச்சரிக்கை!
தி ஆல்ப பெட் இன்கே நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அது இல்லையெனில் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
சீனாவில் கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்ககளை தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை அளித்தனர். சீனாவை தொடர்ந்து அடுத்தடுத்த நாடுகளுக்கு வேகமாக பரவ தொடங்கி உலக நாடுகளேயே கொரோனா அச்சுறுத்தியுள்ளது.மேலும் கொரோனா வைரசானது உருமாற்றம் அடைந்து அடுத்த நிலைகளை அடைந்தது. இந்த வீரியம் மிகுந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் மென்மேலும் பாதிப்புகளை அதிகப்படுத்தியது. தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று அடுத்த தாக்குதல்களை ஏற்படுத்தியது.
இந்த தொற்றை ஒழிக்கும் முயற்சியாக உலக நாடுகள் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடித்து 18 வயது மேற்பட்டோர்க்கு செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அந்நாட்டு அரசு மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தி வருகிறது. இதனையடுத்து கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவித்து வருகிறது. ஊழியர்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்தகுதி, பதவிகள்!
தி ஆல்ஃபபட் இன்க் நிறுவனம், தனது ஊழியர்கள் அனைவரும் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் ஜனவரி 18க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு 30 நாட்களுக்கு ஈட்டு விடுப்பு அளிக்கப்படும்6 மாதங்கள் வரை ஈட்டா விடுப்பு அளிக்கப்படும். அப்போதும் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.