Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீட்டில் 40 லட்ச ரூபாய் வருமானம்! முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளது. தற்போது பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் ஒரு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து குறைந்த முதலீடு மூலமாக அதிக வட்டி கிடைக்கிறது.
பொது வருங்கால வைப்பு நிதி
தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கின. தற்போது இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடுகளை செலுத்தத் தொடங்கினர். இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் குறைந்த முதலீடு செலுத்துவதன் மூலமாக அதிக வட்டிகளை பெற முடியும். அதனால் பெரும்பாலான மக்கள் இதில் முதலீடுகளை செலுத்தத் தொடங்கின.
TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்தகுதி, பதவிகள்!
தற்போது பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் ஒரு சேமிப்பு திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 417 ரூபாய் ஒவ்வொரு நாளும் முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் மேல் பெற முடியும். ஒவ்வொரு நாளும் 417 ரூபாய் என்றால் ஒவ்வொரு மாதமும் ரூ.12000 செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.1.5 முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டு காலமாகும். இவ்வாறு 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் இத்திட்டத்தின் முடிவில் 40.68 லட்சம் ரூபாய் என்ற தொகை வருமானமாக பெற முடியும்.
தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 நிவாரணத் தொகை – இணையதள முகவரி & முழு விபரம் இதோ!
அத்துடன் இத்திட்டத்தில் 25 ஆண்டு காலம் முதலீடு செய்தால் 1.03 கோடி ரூபாய் வரை பெற முடியும். இத்திட்டத்தில் இணைவதற்கு அடையாள சான்று, முகவரி சான்று, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பதிவு படிவம் E போன்ற ஆவணங்கள் தேவைப்படும். அத்துடன் PPF கணக்கை சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்ற யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். மேலும் இத்திட்டத்தில் ஜாயின்ட் அக்கவுண்ட் என்ற வசதி கிடையாது. இத்திட்டத்தில் தனி நபர் மட்டுமே கணக்கை தொடங்க முடியும்.