TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்தகுதி, பதவிகள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வின் பதவிகள், கல்வி தகுதிகள் மற்றும் தேர்வு முறை மதிப்பெண்கள் போன்ற விவரங்களை இப்பதிவில் காண்போம்.
குரூப் 4 தேர்வு:
தமிழகத்தில் அரசு பணிகளில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் துறைகளுக்கு ஏற்ப குரூப் தேர்வுகளை நடத்துகிறது. ஒவ்வொரு வகை பதவிகளிலும் ஏற்ப வினாக்கள் வடிவமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குரூப் 4 தேர்வை லட்சகணக்கான மக்கள் எழுதுகின்றனர். குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படுகிறது குரூப் 4 தேர்வுக்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு ஆகும். குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது.
Post Office அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய பாஸ்புக் பெறும் வழிமுறைகள் இதோ!
இந்த குரூப் 4 தேர்வு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி வரும் நிலையில் TNPSC தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதில் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அரசு பணிகள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 5255 காலிப்பணியிடங்கள் உள்ளதாவும் அறிவிப்பு வெளியாகி 75 நாட்களுக்கு பிறகு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேர்வின் தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இதில் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இனி TNPSC தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள் எடுத்து வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Tnpsc group 4 exam