டிசம்பர் 20 வரை 8 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தினசரி 4 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்று புதிய பாதிப்புகளை உருவாக்கி வரும் நிலையில் இந்த நோய் தொற்று குறித்த அச்சம் பரவலாக எழுந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த சுமார் 33 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!
அதே நேரத்தில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்திலும் ஒமிக்ரான் வைரஸ் தொடர்புடைய தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், காந்திநகர், பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் ஜூனாகத் ஆகிய எட்டு முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்!
இந்த உத்தரவு டிசம்பர் 20 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவானது தினசரி அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரைக்கும் அமலில் இருக்கும் என்றும் அம்மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு தொடர்புடைய மற்ற அனைத்து வழிகாட்டுதல்கள் நடைமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.