பாரதியை சாப்பிட வைக்கும் கண்ணம்மா, ஹேமாவை பார்க்க செல்லும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ இன்றைய எபிசோடு!
கண்ணம்மா வீட்டில் சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்து கொண்டிருக்கும் பாரதியை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து சாப்பிட வைக்கிறார் கண்ணம்மா. பிறகு ஹேமா பற்றிய கனவு வர பாரதி அங்கிருந்து கிளம்புகிறார்.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவுடன் சண்டையிட்டு கொண்டிருக்கும் பாரதி அவர் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் என் சாப்பாட்டை சாப்பிட்டால் மயங்கி விடுவீங்களா என கண்ணம்மா கேட்க அதனை காதில் வாங்கி கொள்ளாத பாரதி சாப்பாட்டை ஆர்டர் செய்ய முற்படுகிறார். பிறகு ஒரு வழியாக சாப்பிட சம்மதிக்கும் பாரதி, நான் சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு பணம் தருவேன் என நிபந்தனை வைக்கிறார்.
‘குக் வித் கோமாளி’ மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிறகு கண்ணம்மாவின் சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடும் பாரதியிடம் சாப்பாடு எப்படி இருக்கிறது என கண்ணம்மா கேட்க நன்றாக இருக்கிறது என பாரதி சொல்கிறார். சாப்பிட்டு முடிந்ததும் அதற்கு கணக்கு வைத்துக்கொள்ள சொல்லும் பாரதி, சுவரில் 6 நாளைக்கு உண்டான ஒரு டைம் டேபிள் போட்டு, வீட்டை விட்டு போகும் போது மொத்தமாக கொடுப்பதாக சொல்கிறார். பிறகு பாரதியை சந்தித்து பேசிய சாந்தி, அதை பற்றி கண்ணம்மாவின் மாமாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை வெண்பாவிடம் சொல்ல மாட்டேன் எனவும் முடிவு செய்கிறார் அவர்.
இப்போது கோர்ட்டில் 6 மாத காலம் ஒன்றாக இருக்க வேண்டும் என கூற ஏன் ஒத்து கொண்டீர்கள், எதாவது பேச மாட்டிங்களா, இப்படியே போன் பார்த்துட்டு இருப்பீங்களா என கண்ணம்மா, பாரதியுடன் பேச முற்பட உனக்கு என்ன இப்போ என பாரதி கோபித்து கொள்கிறார். பிறகு பாரதிக்கு பனங்கற்கண்டு பால் கொடுக்கும் கண்ணம்மா, அந்த கணக்கையும் பாரதியின் டைம் டேபிளில் எழுதிவைத்து விட்டு உறங்க செல்கிறார். அடுத்து, குழந்தையை பற்றி அஞ்சலி மற்றும் அகில் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, குழந்தைக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருப்பதாக கூறும் அகில், அஞ்சலியின் கடத்தல் பற்றி கோபமாக பேசுகிறார்.
ஒமைக்ரான் வைரஸ் பரவல், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதார துறை செயலாளர் பேட்டி!
பிறகு கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் ஸ்கூலுக்கு ஒன்றாக சென்றதை பற்றி அகில், அஞ்சலியிடம் சொல்கிறார். இப்போது, உறங்கி கொண்டிருக்கும் பாரதிக்கு, ஹேமா அழுவதை போல கனவு வர தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்கிறார். பிறகு சௌந்தர்யாவுக்கு போன் செய்ய யோசிக்கும் பாரதி, வேண்டாம் என நினைத்து விட்டு அங்கிருந்து செல்கிறார். அதே போல கண்ணம்மாவுக்கும் லட்சுமி பற்றிய கனவு வர ஆட்டோ ட்ரைவர் குமாருக்கு போன் செய்து விட்டு அவரும் கிளம்புவதுடன் இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு முடிவடைகிறது.