பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ‘ஓமைக்ரான்’ காரணமாக டிச.15 வரை விடுமுறை!
மும்பையில் கொரோனா ஊரடங்கு முடிந்து டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ நவ.24 தேதி அன்று கண்டறியப்பட்டது. இது 10 மடங்கு வீரியம் மிக்கதாக உள்ளது. இந்த புதிய வகை வைரஸ் 24 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 2 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அச்சம்!
தற்போது மும்பையில் கொரோனா ஊரடங்கு முடிந்துள்ளது. இதை தொடர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தற்போதுள்ள ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி வரை விடுமுறை என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பள்ளிகளை வருகிற 15-ந் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ராஜி தட்வி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மினி ஊரடங்கு, பொது இடங்களுக்கு செல்ல தடை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
அத்துடன் இங்கு 1 முதல் 7-ம் வகுப்பு வரை 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் முக கவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளிகளை திறக்கும் முன் பெற்றோர்களிடம் இருந்து தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு வரலாம் என்று ஒப்புதல் கடிதம் ஒன்றை வழங்க வேண்டும். மேலும் இது கட்டாயமாக வழங்க தேவையில்லை எனவும் தெரிவித்தார். அத்துடன் பெற்றோர்கள் விருப்பத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். அப்படி பெற்றோர்கள் விருப்பமில்லை என்றால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.