தமிழகத்தில் மினி ஊரடங்கு, பொது இடங்களுக்கு செல்ல தடை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தடுப்பு பணியாக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஓமைக்ரான் பரவல்:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது 29 நாடுகளில் கொரோனா பரவி வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!
இந்த 2 பேரோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் மீண்டும் இந்தியாவில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக இருப்பதால் மக்கள் அலட்சியம் காட்டாமல் விரைந்து தடுப்பூசிகளை செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் நோய் தடுப்பு பணியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவீரபடுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான 3ம் தடுப்பூசியான சைகோவ்-டி விரைவில் செலுத்தப்படவுள்ளது.
மேலும் மதுரை, திண்டுக்கல்லில் அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் நியாய விலை கடை, சூப்பர் மார்க்கெட், திரையரங்கு, வங்கி, துணிக்கடை உள்ளிட்ட 18 பொது இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். அதே போல திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவிக்காத நிலையில் 2 மாவட்டங்களும் மினி லாக்டவுனை அறிவித்துள்ளது.