Post Office சிறந்த சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1,411 முதலீடு! ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
மத்திய அரசால் அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராம் சுரக்ஷா திட்டத்தில் மாதம் ரூ.1,411 முதலீடு செலுத்துவதன் மூலம் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெறலாம்.
கிராம் சுரக்ஷா:
கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பெரும்பாலான மக்கள் தங்களது சேமிப்புகளை தொடங்கி வருகின்றனர். சேமிப்பு கணக்கை பொறுத்தவரை அனைத்து விதமான வங்கிகள், பைனான்ஸ் மற்றும் அஞ்சல் துறை என அனைத்து நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று பார்த்தால் அஞ்சல் துறை சேமிப்பு என்றே கூறலாம். ஏனென்றால் அஞ்சல் துறை மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிச.3 கடைசி நாள்!
மத்திய அரசு அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் படித்து முடித்தவுடன் பணிக்கு செல்பவர்களும் தங்களது சேமிப்பை தொடங்கும் வகையில் கிராம் சுரக்ஷா என்னும் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 19 வயது முதல் 55 வயது வரை உள்ள அனைவரும் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி மாதம் ரூ.1,500 வரை முதலீடு செய்யலாம்.
SBI கிரெடிட் கார்டு EMI செலுத்துவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த ப்ரீமியத் தொகை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தலாம். சேமிப்பு கணக்கு தொடங்கிய 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தில் 19 வயதில் 10 லட்சத்திற்கான பாலிசியில் முதலீட்டை தொடங்கினால் அவருக்கு மாத ப்ரீமியம் 55 ஆண்டுகளுக்கு ரூ.1,515, 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463, 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 செலுத்தவேண்டியிருக்கும். 55 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.31.லட்சமும், 58 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.33.40 லட்சமும், 60 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.34.60 லட்சமும் முதிர்வு தொகை பெறலாம். இது குறித்த மேலும் விபரங்களுக்கு அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.