Post Office சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.16.2 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெறலாம்! முழு விபரம் இதோ!
மத்திய அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு நல்ல சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. பொதுவாக சேமிப்பு திட்டங்களை பொறுத்தவரை மிகவும் பாதுகாப்பாக இருப்பது அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் மட்டுமே.
ரெக்குரிங் சேமிப்பு திட்டம்:
மத்திய அரசு மக்களின் எதிர்கால வாழக்கைக்கு உதவும் வகையில் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை அஞ்சல் துறையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சேமிப்பு கணக்கை தொடங்க திட்டமிடுபவர்கள் முதலில் அந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் வட்டி, திட்டத்திற்கான காலம், தவணை தொகை மற்றும் தொகைக்கான பாதுகாப்பு உள்ளிட்டவைகளை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் கணக்கை தொடங்குவது நல்லது. இந்த சேமிப்பு கணக்குகள் மாதத்தவணை டெபாசிட் மற்றும் பிக்ஸட் டெபாசிட் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது
தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் – பட்டியல் வெளியீடு!
அந்த வகையில் குறைந்த அளவில் சேமிப்பு தொடங்கி சாமானிய மக்கள் பயனடையும் விதமாக ரெக்குரிங் டெபாசிட் திட்டம் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ரெக்குரிங் டெபாசிட் முறை மூலம் ரூ.100 முதல் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இந்த ரெக்குரிங் டெபாசிட் திட்டத்தில் ஆண்டுக்கு 5.8% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் சேமிப்பதன் மூலம் 10 வருடங்களுக்கு ரூ.16,28,963 ரிட்டன்ஸ் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு ரூ.40 ஆயிரத்தை தாண்டும் பட்சத்தில் 10% வருடாந்திர வரி பிடித்தம் செய்யப்படும்.
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை வெளியீடு!
மேலும் வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாத முதலீட்டாளர்கள் 15G பூர்த்தி செய்வதன் மூலம் TDS விலக்கு பெறலாம். அஞ்சல் துறையை போலவே பல்வேறு தனியார் வங்கிகளும் இந்த ரெக்குரிங் சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகின்றன. அந்த வகையில் YES பேங்க் 7% வட்டி, HDFC பேங்க் 5.50% வட்டி, AXIS பேங்க் 5 – 10 ஆண்டு திட்டத்திற்கு 5.50% வட்டியும் வழங்குகின்றன. மேலும் SBI பேங்க் 5 – 10 ஆண்டு திட்டத்திற்கு 5.40% வட்டி வழங்குகிறது. இவ்வாறு அனைத்து தர மக்களும் தொடங்கும் வகையில் இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.