நவ.22 வரை தீபாவளி விடுமுறை நீட்டிப்பு – கல்வித்துறை அறிவிப்பு! எந்தெந்த பள்ளிகளுக்கு தெரியுமா?
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் கற்றல் சாதனைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்து கொள்ளாத பள்ளிகளுக்கு வரும் நவம்பர் 22ம் தேதி வரை தீபாவளி விடுமுறை நீட்டிக்கப்படுவதாக மஹாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
விடுமுறை நீட்டிப்பு
கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பேரலை தொற்று ஓய்ந்திருக்கும் சூழலில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் இந்த வாரம் முதல் மீண்டுமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மும்பை மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு நவ.22ம் தேதி வரை தீபாவளி விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்து.
முகூர்த்த நாட்கள் சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – மாலை நிலவரம்!
அதாவது நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் கற்றல் சாதனைகள் குறித்த நாடு தழுவிய கணக்கெடுப்பு நடந்து வரும் சூழலில், கணக்கெடுப்பில் பங்கேற்காத மும்பையில் உள்ள பள்ளிகள் நவம்பர் 22ஆம் தேதி வரை தீபாவளி விடுமுறையை தொடரலாம் என கல்வித்துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேசிய சாதனை ஆய்வு (NAS) 2021க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மும்பையில் உள்ள 292 பள்ளிகள் நேற்று (நவ.11) முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் நவ.10ம் தேதி வரை குழப்பம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. இப்போது, கணக்கெடுப்புக்காக திறக்கப்பட்டுள்ள பள்ளிகள் 100% வருகையை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. மேலும் கணக்கெடுப்பின் போது பெற்றோர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனுடன் மாணவர்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும்.
9ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி – பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!
அவர்கள் டிபன் மற்றும் தண்ணீரை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் பள்ளிகளை சேர்ந்த 39 லட்சம் மாணவர்களுக்கு மொழி, கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்ட இருக்கும் நிலையில், அதன் இறுதி எண்ணிக்கை இன்று (நவ.12) தெரிய வரும். இந்த நாடு தழுவிய கணக்கெடுப்பில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த 15,302 பள்ளிகளும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 9,499 பள்ளிகளும், மகாராஷ்டிராவின் 7,330 பள்ளிகளும் கலந்து கொள்ள உள்ளன.