முகூர்த்த நாட்கள் சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – மாலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்தது வருவது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்று மாலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலையை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தங்கத்தின் விலை:
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியது. இதன் விளைவாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். தங்கத்தின் விலை அதிகரிப்பு முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுக்கிறது. ஆனால் சாமானிய மக்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. பொதுவாக பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த தினங்களிலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை அதிகரித்தது.
9ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி – பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!
இதனால் பண்டிகை தினங்களில் மக்கள் தங்க ஆபரணங்கள் வாங்க முடியாமல் இருந்தனர். எப்போது நகை விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.37,008-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் ரூ.4,626-க்கும் விற்பனையானது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – புதிய உறுப்பினர்களுக்கு கெடுபிடி!
தங்கத்தின் விலையானது காலை மாலை என ஒவ்வொரு நேரங்களில் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை நிலவரத்தை தொடர்ந்து மாலையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று மாலை நேரடி நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்துள்ளது. அதனால் ஒரு சவரன் ரூ.36,976க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,622க்கும் விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி ரூ.71.20க்கு விற்பனையாகிறது. இம்மாதத்தில் அடுத்தடுத்து சுபமுகூர்த்த தினங்கள் வரும் நிலையில் தங்கத்தின் விலை குறைவது நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.