9ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி – பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொற்றுக்கு மத்தியில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்திலும் கடந்த மாதம் துவங்கி பள்ளிகள் அனைத்தும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்க சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முடித்து பள்ளிக்கு திரும்பிய மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட பள்ளி மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – புதிய உறுப்பினர்களுக்கு கெடுபிடி!
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தெலுங்கா மாநிலம், பஞ்சாரா ஹில்ஸில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவருக்கு நேற்று (நவ.11) கொரோனா பாதிப்பு இருப்பது கண்றியப்பட்டுள்ளது. அதனால் இப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இனி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பள்ளி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில மொழி கட்டாயம் – முதல்வர் அறிவிப்பு!
இருந்தாலும் அனைத்து வகையான கொரோனா வழிகாட்டுதல்களும் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்று நிர்வாகம் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்றும் பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் மாநிலத்தில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தினமும் 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்து பதிவாகி வருவதால் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.