நீலகிரி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நவம்பர் 12 நிலச்சரிவு அபாயம்! எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நவம்பர் 12 முதல் 16ம் தேதி வரை நிலச்சரிவு அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலச்சரிவு அபாயம்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த பருவ மழையானது ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பரவலாக பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக தகவல் வெளியாகின.
நவ.22 வரை தீபாவளி விடுமுறை நீட்டிப்பு – கல்வித்துறை அறிவிப்பு! எந்தெந்த பள்ளிகளுக்கு தெரியுமா?
இதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் குடியிருக்கும் வீட்டுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுவரை மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதனை தொடர்ந்து இன்னும் 4 நாட்களுக்கு அதாவது நவ.16ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முகூர்த்த நாட்கள் சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – மாலை நிலவரம்!
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதி என்பதால் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும். இந்நிலையில் அப்பகுதிக்கு வரும் நவ.13 முதல் 16ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதனால் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் மக்கள் நீலகிரி பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.