1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.10ம் தேதி பள்ளிகள் திறப்பு – முதல்வர் உத்தரவு!
கொரோனா தொற்று பரவல் பாதிப்புகள் குறைந்துள்ள காரணத்தால் மாநிலம் முழுவதும் உள்ள 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்க ஹிமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் மீண்டும் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் குறைந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாதிப்பு குறைந்துள்ள பல மாநிலங்களில் முன்னதாக உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இன்னும் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. உயர்வ குப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதன் நிலவரத்தை பொறுத்து ஆரம்பநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – குழந்தைகள் தின போட்டிகள்!
ஹிமாச்சல பிரதேசத்தில் டிசம்பர் 10 முதல் 15 வரை தர்மஷாலாவில் மாநில விதான் சபாவின் குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை செய்ய மாநில அமைச்சரவை முடிவு செய்தது. மேலும், மாநிலத்தில் குளிர்கால கூட்டத்தொடர் ஐந்து அமர்வுகளாக நடத்தப்படும். இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் ஆரம்ப வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து அமைச்சரவை ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக கல்லூரி மற்றும் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.
இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு – கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!
ஹிமாச்சல பிரதேசத்தில் கொரோனா தொற்றின் பரவல் மேலும் குறைந்துள்ளது. இதனால் 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்க ஹிமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் நேற்று அறிவித்துள்ளார். இந்த முடிவு நேற்று முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதன்படி, 3 முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 10 ஆம் தேதியும், 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். இதனுடன் போக்குவரத்து பேருந்துகளில் முன்னர் இருந்த 50% விதிமுறைகளுக்கு பதிலாக 100% திறனுடன் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.