தமிழக வனத்துறையில் 42 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!
தமிழகத்தில் வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்புமாறு வனக் காப்பாளர்கள் வனத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் வன பாதுகாப்பில் சிக்கல் நிலவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை காலிப்பணியிடம்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் அரசுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை என்பதால் அதிக அளவிலான காலிப்பணியிடங்கள் இருந்து வருகின்றன. தற்போது கொரோனா குறைந்து வருவதால் போட்டி தேர்வுகள் நடத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் கூடலூர் வன கோட்டத்தில் 42 வன ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அந்த பகுதியில் வன பாதுகாப்பில் சிக்கல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (நவ.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கூடலூர் வனக்கோட்டம் கேரளா மற்றும் கர்நாடகா எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பணிபுரியும் வன ஊழியர்கள் வனத்தை காப்பது மட்டுமல்லாது மனித- வன விலங்கு மோதல்களை தடுக்கும் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் வன கோட்டத்தில் 8 வனச்சரகர்கள், 12 வனவர்கள், 47 வன காப்பாளர்கள், 23 வன காவலர்கள் பணிக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 4 வனச்சரகர்கள், இரண்டு வானவர்கள், 21 வன காப்பாளர்கள், 13 வன காவலர்கள் என மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
இவ்வாறு காலிப்பணியிடங்கள் இருப்பதால் வன ஊழியர்கள் ஓய்வின்றி வேலை பார்க்கும் நிலை உள்ளது. அதனால் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால் அங்கு பணிபுரிபவர்கள் பணியிட மாற்றம் பெற்று வேறு ஊர்களுக்கு செல்கின்றதாக கூறப்பட்டுள்ளது. அதனால் வனத்துறை அமைச்சர் விரைந்து இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அப்படி இல்லையென்றால் வேறு பகுதிக்கு மாறுதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.