தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா மற்றும் சாதாரண சளி, இருமல் குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

ஜி.கே வாசன் கோரிக்கை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக கடந்த நவ.1 ம் தேதி தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் 19 மாதங்களுக்கு பிறகு உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கொரோனா மற்றும் சாதாரண சளி, இருமல் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குமாறு ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.12 பேச்சுப்போட்டி!

அதனை தொடர்ந்து ஒரு சில பள்ளிகளில் வகுப்பறை கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் அதனை விரைந்து சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா பரவலை தடுக்க மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர செய்ய வேண்டும். அவ்வாறு அமர வைக்கும் அளவிற்கு போதுமான வகுப்பறைகள் இல்லை என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் பற்றாக்குறை வேறு இருக்கிறது. நிறைய ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் இருந்து வருகிறது.

ஸ்மார்ட்போன் இல்லாமல் WhatsApp வெப் பயன்படுத்துவது எப்படி? முழு விபரம் இதோ!

அதற்கு ஏற்றார் போல் பிற பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்களை கொண்டு நிலைமையை சமாளிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற நிலைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் கவனத்தில் கொண்டு துரிதமாக செயல்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு அளித்து பயம் இல்லாமல் கல்வி கற்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!