புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி – வருத்தத்துடன் பேட்டி!
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக இறந்ததை அடுத்து, அவரது நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
சிவகார்த்திகேயன் அஞ்சலி:
கன்னட நடிகர்-தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார் கடந்த 29 ஆம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். அவரது இறப்பு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பல முன்னணி நடிகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆன்லைன் மோசடியில் வங்கிக்கணக்கில் இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கை – RBI க்கு கடிதம்!
அதன் பின் அவரது உடல் அவர் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித் மறைவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, புனித்தின் சகோதரும் நடிகருமான சிவராஜ்குமாரை ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், புனித்தின் மறைவை நம்ப முடியவில்லை.
மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3 ரூபாய் குறைப்பு – தேர்தல் எதிரொலி!
ஒரு மாதத்துக்கு முன்பு அவருடன் பேசியிருந்தேன். சிறந்த மனிதர். அவர் மறைவு திரையுலகுக்கு பெரும் இழப்பு. அவருடைய நல்ல விஷயங்கள் எப்போதும் நினைவு கூறப்படும். பெங்களூரு வந்தால் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். நான் இப்போது பெங்களூருவில் இருக்கிறேன். ஆனால் அவரைப் பார்க்க முடியவில்லை என வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார். புனித் உடலிற்கு கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.