தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பதிலளித்துள்ளார்.
ரேஷன் அட்டை:
தமிழகத்தில் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பொது விநியோக ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. அதன் வாயிலாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் பயனடைந்து வருகின்றனர். அரசு ரேஷன் அட்டைகளின் மூலமாக பல சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது அரிசி, சேலை, வேட்டி மற்றும் சமையல் பொருட்கள் என்று வழங்கப்பட்டது. கொரோனா நிவாரண நிதியாக புதிதாக ஆட்சி அமைத்த அரசானது 4000 ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு – பாதுகாப்பு வழிமுறைகள்! சுகாதாரத்துறை வெளியீடு!
ரேஷன் அட்டைகளை பெற அரசின் பொது விநியோக இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான வகையில் ரேஷன் அட்டைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிதாக ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது ரேஷன் அட்டை வழங்குவது தாமதமாகி வருகிறது. இது குறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்!
செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புதிதாக ரேஷன் அட்டைகளை அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்குவதற்கு உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே ரேஷன் கடைகளில் உரிய நேரத்தில் பொருட்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.